தமிழிசை மட்டுமா, எச்.ராஜா செய்த தப்பை பாருங்கள்!
சென்னை: மாணவி, சோபியாவை போலீசில் பிடித்து கொடுத்து பொறுமையின்றி பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நடந்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அக்கட்சி தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா, நான் மட்டும் குறைந்தவரா என்பதை போல ஒரு தப்பு செய்துள்ளார்.
என்ன தப்பு என்று கேட்கிறீர்களா?
எச்.ராஜா இன்று வெளியிட்ட ட்வீட்டில்தான் அந்த தப்பு உள்ளது. ராஜா ட்வீட் இதுதான்:
விமானத்திலும் தூத்துக்குடி விமாறநிலையத்திலும் மாநிலத் தலைவி Dr.தமிழிசை , பாஜக, மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்ட ஸோஃபியா வின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லா அநாகரீக செயல்களையும் ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது. இப்படி சொல்லியுள்ளார் அந்த ட்வீட்டில்.
விமானத்திலும் தூத்துக்குடி விமாறநிலையத்திலும் மாநிலத் தலைவி Dr.தமிழிசை , பாஜக, மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்ட ஸோஃபியா வின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லா அநாகரீக செயல்களையும் ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது
— H Raja (@HRajaBJP) September 4, 2018
விமான நிலையத்திலும் என்பதைத்தான், விமாற நிலையத்திலும் என கூறியுள்ளார் அவர்.
தமிழிசையும் சாதாரணம் இல்லை. ஏற்கனவே, airgraft என்று ஆங்கிலத்தில் தப்பான எழுத்துக்களுடன் ட்வீட் செய்திருந்தார்.