For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலைக்காரி, ஓரிரவு எழுதிய அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா? ஒரண்டையை இழுக்கும் எச். ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 18-02-2020 | Oneindia tamil Morning news

    சென்னை: பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தமிழ் பக்தர்களா? என கேள்வி எழுப்பி மீண்டும் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

    சமூக வலைதளங்களில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பதிவிடும் ஒவ்வொன்றும் சர்ச்சையாகி வருகிறது. பொது இடங்களில் மிக கடுமையான இழிசொற்களால் எச். ராஜா பேசிய பல விவகாரங்கள் பூதாகரமாக வெடித்தும் இருக்கின்றன.

    H Raja criticises Anna for his writings

    சென்னை உயர்நீதிமன்றம் குறித்து எச். ராஜா விமர்சித்தது இன்றும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்து தரம் தாழ்ந்து எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அடுத்த சர்ச்சையாகி உள்ளது.

    இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் வளர்த்தது யார்? தேவாரம்,திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம் பெரியபுராணம் ஆனால், இம்மாதிரியாக எந்த ஒரு படைப்புமில்லாமல் வேலைகாரி,ஓடிப்போனவள் போலீஸ்காரன் மகள், ஓரிரவு எழுதியவர்களெல்லாம் தமிழ் பக்தர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் எச்.ராஜா.

    English summary
    BJP National Secretary H Raja has criticised Anna for his writings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X