For Daily Alerts
Just In
உப்பு.. தண்ணீர்.. எச்.ராஜா என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா??
விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என நடிகர் விஷால் ஆபீஸ் ரெய்டு பற்றி பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் எச். ராஜா கூறியதாவது:
அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புகள் தங்களது கடமையை செய்கிறார்கள். அதற்கும் பாஜகவுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
இதற்கும் ஆட்சிக்கும் கூட சம்பந்தம் கிடையாது. அந்தந்த துறைகள் அவர்களது கடமையை செய்கிறார்கள். அப்படி இருக்கின்றபோது இதில் உள்நோக்கம் இருப்பதற்கு என்ன முகாந்திரம் உள்ளது?
உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். வரிகட்டலைன்னா விளைவுகளை சந்திக்கனும்.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
Comments
English summary
BJP National Secretary H Raja comments on the IT officials raid at Actor Vishal office.