இலங்கைக்கு ஆம்புலன்ஸ்.. "சர்காருக்கு" நன்றி தெரிவித்த எச். ராஜா!
சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு உதவி ஆம்புலன்ஸ் அனுப்பிய மோடி சர்க்காருக்கு எச். ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் ஒரு படம் இடம் பெற்றுள்ளது. வரிசையாக ஆம்புலன்ஸ்கள் இதில் காணப்படுகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றிட ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளது மோடி சர்கார். பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி. pic.twitter.com/VYkW79BQh7
— H Raja (@HRajaBJP) July 22, 2018
இதுகுறித்து எச் ராஜா குறிப்பிடுகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றிட ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளது மோடி சர்கார். பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இந்த மக்களுக்கு முதல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துட்டு வாங்க pic.twitter.com/MrExMXq3U8
— பிரபு (@PirapuSalaman) July 22, 2018
இந்த டிவீட்டுக்கு பாராட்டுகளும், வசவுகளும் வழக்கம் போல சரிசமமாக குவிந்துள்ளன. முதலில் உள்ளூரில் போதிய ஆம்புலன்ஸ் வசதியை செய்து விட்டு வெளிநாடுகளுக்கு மோடி அரசு உதவ வேண்டும் என்று பலர் கேட்டுள்ளனர்.
அதேசமயம், தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் அனுப்பியிருப்பதாக கூறுவது நம்புவது போலவா இருக்கிறது என்றும் சிலர் ராஜாவைக் கேட்டுள்ளனர்.
ஆனா அதே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுல இறந்த தமிழ் மக்கள் பத்தி எதுவுமே சொல்லலியே உங்க மோடி சர்க்கார். அப்போ அங்க இருக்கறது தான் தமிழர்களா? நாங்க இல்லையா?
— Manikandan Dravid (@rahulmanidravid) July 22, 2018
இது இன்னொருவரின் குமுறல். அதே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுல இறந்த தமிழ் மக்கள் பத்தி எதுவுமே சொல்லலியே உங்க மோடி சர்க்கார். அப்போ அங்க இருக்கறது தான் தமிழர்களா? நாங்க இல்லையா? என்று கேட்டுள்ளார் இவர்.