For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவங்கெல்லாம் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்.... எச். ராஜா யாரை சொல்கிறார் தெரியுமா?

தமிழகம் அமைதி பூங்கா இல்லை என்ற பொன் ராதாகிருஷ்ணன் கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

    சென்னை: தமிழகம் அமைதி பூங்கா இல்லை என்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

    சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே கடந்த 2-ஆம் தேதி 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர். ஒரே நேரத்தில் இதுவரை அத்தகைய எண்ணிக்கையில் ரவுடிகளை கைது செய்தது இல்லை என்று தெரிகிறது.

    H.Raja says about O.Panneer Selvam

    இதையடுத்து ரவுடிகளின் தலைவனான பினு தப்பியோடிவிட்டு கடந்த ஒரு வாரம் கழித்து போலீஸில் சரணடைந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அவர் தமிழகம் அமைதிப்பூங்காவாக இல்லை என்று தெரிவித்தார். இந்த கருத்து பதிலடிக் கொடுக்கும் விதமாக துணை முதல்வர் ஓபிஎஸ் கூறுகையில் , தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, தமிழகம் அமைதிப்பூங்கா இல்லை என்ற பொன். ராதா கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று ஓபிஎஸ்ஸின் பெயரை நேரடியாக கூறாமல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    English summary
    H.Raja says that those who refused to accept law and order in TN is not quite good, their minds affects. He indirectly criticises O.Panneer selvam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X