For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலைக் கடத்தலும், திருட்டும் தொடருமா.. எச். ராஜா டிவீட்டால் குழப்பம்!

Google Oneindia Tamil News

சென்னை: சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பாக டிவீட் போட்டுள்ளார் எச். ராஜா. அதில், எதிர்காலத்தில் வரும் வழக்குகள் என்று கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப் போவதாக தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது. சிலைக் கடத்தல் விவகாரத்தை இரும்புக் கரம் கொண்டு கையாண்டு வரும் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேலை ஓரம் கட்டும் வகையிலும், அவரது கையில் மிக மிக முக்கியப் பிரமுகர்கள் சிக்கி விடாமல் காக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

H Raja tweets on Idol theft cases

இந்த நிலையில் இதுகுறித்து எச். ராஜா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்,

சிலை கடத்தல் வழக்குகளை CBI வசம் ஒப்படைக்க கொள்கை முடிவு என்பது தற்போது கையில் உள்ள வழக்குகள் மட்டுமா அல்லது எதிர்காலத்தில் வரும் வழக்குகள் அனைத்துமா? மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதில் எதிர்காலத்தில் வரும் வழக்குகள் என்று இவர் கூறியிருப்பதால், சிலைக் கடத்தல் தொடரும் என்று சொல்ல வருகிறாரா அல்லது சிலைகள் கடத்தப்படுவது நிற்காது என்று கூற விரும்புகிறாரா என்பது தெரியவில்லை. ஏன் இப்படி ஒரு கேள்வியை எச். ராஜா கேட்டுள்ளார் என்றும் புரியவில்லை.

English summary
BJP National secretary H Raja has asked clarification from the TN govt on the handing over of Idol theft cases to the CBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X