For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்

Google Oneindia Tamil News

போளூர்: தமிழகத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை 24 மணிநேரத்துக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இந்து சமுதாயம் இனி எதற்கும் அனுமதி கேட்காது.. நாங்களும் பார்த்து கொள்வோம் என்று டெல்லி வன்முறைக்கு காரணமாக பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை போல பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.

Recommended Video

    பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண் - எச்.ராஜா

    திருவண்ணாமலை போளூரில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:

    H Raja warns Tamilnadu Govt on CAA Protests

    சி.ஏ.ஏ.எதிர்ப்பு கூட்டமைப்பு என்கிற போர்வையில் காவல்துறை அதிகாரிகள் இஸ்லாமிய முறைப்படி கொல்லப்பட்டுள்ளார்கள். கல்லால் அடித்து போலீஸை கொன்றிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்கிற, அந்த நாடுகளின் சிறுபான்மையினருக்கு சில ஆயிரம் பேருக்கு குடியுரிமை கொடுப்பதற்குதான் சி.ஏ.ஏ. இதற்கு எதிராக போராட்டம் ஏன்? யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான அல்ல சி.ஏ.ஏ.

    இவர்களது குறிக்கோள், நோக்கம் சி.ஏ.ஏ. எதிர்ப்பு அல்ல. 1947 பிரிவினைக்கு முன்பாக தேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் மலப்புரம் கலவரம், நவகாளி வன்முறை ஆகியவற்றை நாடு முழுவதும் மீண்டும் செயல்படுத்த சதிதான் இது. இது இன்றைய தினம் டெல்லியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள், கல்லும் செருப்பும் எடுத்துக் கொண்டு காவல்துறையினரை தாக்கினார்கள். டிசி விஜயகுமாரி முகத்திலே வெட்டப்பட்டார்; இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பிளேடால் கிழிக்கப்பட்டார். இவர்கள் எல்லாம் மசூதியில் அமைதியாக வழிபாடு நடத்த போனவர்களா என்ன?

    திட்டமிட்ட ரீதியில் நாடு முழுவதும் மீண்டும் இஸ்லாமிய மத கலவரத்தை நடத்துகிற முயற்சிதான் இந்த சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம். இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் குச்சி கூட இல்லையே? ஏன்?

    இதே மாதிரி அனுமதி இல்லாமல் இந்துக்களை பிள்ளையார் வைக்க விடுவீங்களா? வேட்டையாட மாட்டீங்க? எத்தனை தடவை வேட்டையாடியிருக்கீங்க? எத்தனை தடவை என்னை மிரட்டியிருக்காங்க? உடனடியாக தமிழக அரசு, காவல்துறை எந்த இடத்திலும் அவர்களது அனுமதி இல்லாத கூட்டங்கள் நாளைக்கு இருக்கக் கூடாது; 24 மணிநேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    இல்லையெனில் இந்து சமுதாயம் எதற்கும் நாங்கள் அனுமதி கேட்க மாட்டோம். நம்மளும் பார்த்துகிறது? What is there? ஆகவே முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். இவ்வாறு எச். ராஜா கூறினார்.

    English summary
    BJP National Secretary H Raja has warned TamilNadu govt on the CAA Protests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X