நல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
கடின உழைப்புடன் நல்ல எண்ணமும் ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கடின உழைப்புடன் நல்ல எண்ணமும் ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது டாக்டர் பட்டம் பெற்ற ஏசி சண்முகத்துக்கு அவர் நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார்.
கட்டாயப்படுத்தியதால்
இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் முதலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறியதாகவும் ஆனால் ஏசி சண்முகம் கட்டாயப்படுத்தியதால் பங்கேற்றதாகவும் கூறினார்.
ஏசி சண்முகத்திற்கு பாராட்டு
மேலும் எந்த நிலையிலும் ஏசி சண்முகம் முடி முதற்கொண்டு அனைத்தையும் சரிசெய்து நீட்டாக இருப்பார் என்றும், பலருக்கு வேலை கொடுத்திருப்பதாகவும் பாராட்டி பேசினார். மேலம் ஏசி சண்முகம் எறும்பு போல் வேலை செய்வதால் இரும்பு போல் இருப்பதாகவும் ரஜினி புகழாரம் சூட்டினார்.
மனதை கட்டுப்படுத்த வேண்டும்
நம் உடலை பிசியாக வைத்திருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்றும், மனது தானாக பிசியாகிவிடும். மனதை கட்டுப்படுத்த வேண்டும். மனதை கட்டுப்படுத்த தியானம் போன்றவை செய்ய வேண்டும்.
ஆண்டவன் அருள் தேவை
நன்றாக உழைப்பவர்கள் எல்லாம் வெற்றி பெறமுடியாது. உழைப்பும் முயற்சியும் இருப்பவர்கள் மட்டும் வெற்றி பெற முடியாது, ஆண்டவன் அருளும் நல்ல எண்ணமும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.