ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தேவைக்கு மேல் நிதி சேர்ந்துவிட்டது-அமைச்சர் பாண்டியராஜன்
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி சேர்ந்துவிட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கும்பகோணம்: ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தேவையான நிதிக்கு மேல் சேர்ந்துவிட்டதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் பிளான்சேரியில் உள்ள அஷ்டபைரவர் திருக்கோவிலில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஹார்டுவேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைக்கு தேவையான 6 மில்லியன் டாலர்க்கு மேல் நிதி சேர்ந்து விட்டது. சிங்கப்பூரை சேர்ந்த அம்ருத் என்ற 35 வயது தமிழர் தலைமையில் தமிழ் இருக்கை அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கைகள் உலக தரத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழ் பல்கலை கழகம் மற்றும் ஹாவேர்டு பல்கலை கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ் துறை மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.