For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்துவிட்டீர்களா மாணவ செல்வங்களே?: கவலை வேண்டாம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியருக்கு புதிதாக புத்தகங்கள் வழங்க சில நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன.

வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. வெள்ளத்தில் மக்கள் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பலர் பாடப் புத்தகங்களை பறிகொடுத்துவிட்டு தவிக்கிறார்கள். இந்நிலையில் தான் ட்விட்டரில் இரண்டு பேர் புத்தகங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளனர்.

ஒரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

டியர் பள்ளி/கல்லூரி மாணவ, மாணவிகளே,

வெள்ளத்தில் உங்கள் புத்தகங்களை பறிகொடுத்துவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்.

உங்களின் முகவரி மற்றும் புத்தகங்களின் விபரங்களை வாட்ஸ் ஆப் செய்யவும். புத்தகங்கள் விரைவில் உங்களை வந்தடையும்.

விவின்: 9677035963
விவேக்: 9566180758

மற்றொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

10 மற்றும் +2 மாணவ, மாணவியர் யாராவது உங்களின் புத்தகங்களை வெள்ளத்தில் இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். என்னை தொடர்பு கொள்ளவும். நான் அனைத்து புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கிறேன். தொடர்புக்கு - 9663123165

English summary
Some people have come forward to buy fresh set of books to those school/college kids who have lost their books during floods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X