மதுரை வந்த மாத்யூவையும் விட்டு வைக்காத ‘மகிழ்ச்சி’!
மதுரை: மதுரை வந்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மாத்யூ ஹெய்டன், தனது இந்த பயணம் குறித்து டிவிட்டரில் 'மகிழ்ச்சி' தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக பல காலமாக வலம் வந்தவர் ஹெய்டன். இவர் ஆஸ்திரேலியா அணியின் அட்டகாசமான அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆவார்.
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் புரமோஷனுக்காக தமிழகம் வந்துள்ளார் ஹெய்டன். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஹெய்டன், பின்னர் மதுரை சென்றார்.
It's all happening down in Madurai....oh yer feeling the #magizhchi @TNPremierLeague pic.twitter.com/tjMzXeAsnl
— Matthew Hayden AM (@HaydosTweets) August 9, 2016
அங்கு மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்த ஹெய்டன், பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்கிடையே தன் மதுரைப் பயணம் குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ வெளியிட்டுள்ளார் ஹெய்டன். கூடவே அதில் அவர், 'மக்களின் வரவேற்பால் தான் மகிழ்ச்சி' அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அவர், 'மகிழ்ச்சி' என்ற தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது தான்.
ஏற்கனவே, கபாலி படத்தில் ரஜினி பேசிய மகிழ்ச்சி வசனம் உலகம் முழுவதும் பிரபலமானது நாம் அறிந்ததே. இந்நிலையில், மதுரையில் ஹெய்டனும் தனது 'மகிழ்ச்சி'யை வெளிப்படுத்த ரஜினி ரசிகர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.