For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.வி. சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்?: சென்னை போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

எஸ்.வி. சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சென்னை போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்- வீடியோ

    சென்னை: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் போலீஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் பாஜகவைச் சேர்ந்த இயக்குநர் எஸ்.வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    HC Condemns Chennai Police on SV Shekher issue

    இதுதொடர்பாக, அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி எடுத்த நிலையில், ஒரு வார காலத்திற்கு இடைக்கால முன் ஜாமின் மனு கேட்டு எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துஇருந்தார்.

    அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகத்தின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இன்னும் ஏன் எஸ்.வி சேகரை போலீஸார் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், எஸ்.வி சேகரை கைது செய்து விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    HC Condemns Chennai Police on SV Shekher issue. Earlier Case filed on SV Shekher for spreading bad ideas about women Journalists .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X