For Daily Alerts
Just In
மனித கழிவை அள்ள வைத்த சேலம் முதியோர் இல்ல நிர்வாகி... சுகாதார அதிகாரிகள் ஆய்வு
சேலம் முதியோர் இல்ல நிர்வாகிகள் மனித கழிவை அள்ள வைத்தது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தினர்.
சேலம்: சேலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் மனித கழிவுகளை வெறும் கைகளால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அங்கு இன்று சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தினர்.
சேலம் அன்னதானப்பட்டியில் மாநகராட்சி உதவியோடு கலைவாணி என்பவர் முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார். இதில் 35 முதியவர்கள் பராமரிக்கப்படுகின்றனர்.
இந்த இல்லத்தில் முதியவர்களுக்கு கொடூரங்கள் நடப்பதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கு வற்புறுத்தப்படுகிறார். அதுபோல் மூதாட்டி ஒருவர் தண்ணீர் தொட்டியில் இறக்கப்பட்டு சுத்தம் செய்ய வைக்கப்படுகிறார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் சுகாதார அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.
Comments
English summary
Elderly person in Salem elderly home cleans his human waster using hands. Health department official in the home.
Story first published: Thursday, June 28, 2018, 14:28 [IST]