மூளைச்சாவு… மதுரையில் இருந்து சென்னைக்குப் பறந்த இதயம்
மதுரை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயமும் கல்லீரலும் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு பொறுத்தப்பட்டது.
தாமோதரன் என்ற விபத்தில் சிக்கியதை அடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூளை சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது இதயம், கல்லீரல், கண்கள் ஆகிய உறுப்புக்களை தானமாக கொடுக்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாமோதரனின் இதயம் மற்றும் கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கிரீன்காரிடர் முறையில் மதுரையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பகல் 12.55 மணிக்கு இதயமும், அதனைத் தொடர்ந்து 1.05 மணிக்கு கல்லீரலும் கொண்டு செல்லப்பட்டு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.
தென் மாவட்டம் ஒன்றிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் இதயம் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.