சுட்டெரிக்கும் வெயில்.. சுருண்டு விழுந்து ஒருவர் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் கொடுமை
சுட்டெரிக்கும் வெயிலில் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். திருவண்ணாமலையில் இந்தக் கொடுமை இன்று அரங்கேறியுள்ளது.
திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. அனல் காற்று வீசும் என்பதால் பகலில் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பொதுமக்கள் வெளியே நடமாடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் பட்டப்பகல் வெயிலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சொந்த வேலை விஷயமாக கொளுத்தும் வெயிலில் வெளியே சென்றுள்ளார்.
அப்போது, வெப்பத்தை தாங்க முடியாமல் சாலையிலேயே சுருண்டு விழுந்துள்ளார். அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவரை தூக்கி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சாலையில் சுருண்டு விழுந்து செல்வராஜ் மரணம் அடைந்தது குறித்து வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.