For Quick Alerts
For Daily Alerts
Just In
கன மழை.. கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. நீலகிரியில் 5 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Recommended Video
கனமழை, கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..வீடியோ
கோவை: கன மழையால் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர், நீலகிரி, குந்தா, குன்னூர் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குன்னூர் தாலுகாவில் கேத்தி, எல்லநள்ளி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்க்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
Comments
English summary
Coimbatore district schools have been declared holiday as heavy rains lashes today. The school and colleges have been declared holidays in 3 taluks in Nilgiris district.