தென்காசி சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை- குற்றாலம் மெயின் அருவியில் மெர்சல் வெள்ளம்
தென்காசி: தென்காசி சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
Recommended Video
வெப்ப சலனத்தால் தென்மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது.
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது.
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்தது. குற்றாலம் மெயின் அருவில் மிரட்டும் வகையில் வெள்ளம் பாய்ந்தோடியது.
மோடி சொன்ன ஆத்ம நிர்பார் என்பது என்ன? கூகுளில் வலைவீசிய இந்தியர்கள்- ட்விட்டரிலும் களைகட்டிய விவாதம்
தற்போது லாக்டவுன் அமலில் உள்ள சூழ்நிலையில் குற்றாலம் பகுதிகளில் நிலவிய இதமான காலநிலையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.