இரவு முழுக்க கொட்டித் தீர்த்த மழை.. இன்னும் விடவில்லை.. தமிழகத்தில் பல இடங்களில் ஜில்ஜில் கூல்கூல்!
இன்று அதிகாலையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: இன்று அதிகாலையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து விடாமல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மும்பை, கேரளா, புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கேராளாவும், மும்பையும்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கொங்கு
தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது.
டெல்டா எப்படி
அதன்படி டெல்டா மாவட்டங்களில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் இரவு முழுக்க மழை பெய்தது. இந்த பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி எப்படி
அதேபோல் புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது. மிக முக்கியமாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, அண்ணாசாலை, தி நகர், மேடவாக்கம், குரோம்பேட்டை, போரூர், ராயபுரம், ராமாபுரம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
கனமழை
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னையிலும் மற்ற பிற கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை தெரிவித்து இருக்கிறது.