For Daily Alerts
Just In
திண்டுக்கல்லில் பயங்கர இடி மின்னலுடன் கனமழை
திண்டுக்கல்லில் கனமழை கொட்டியது.
திண்டுக்கல்: கோடை வெயில் பகல் முழுவதும் உக்கிரத்தைக் கொட்டிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் பயங்கர மழை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி அனலாக தகிக்கிறது. இருப்பினும் ஆங்காங்கே கோடை மழை கொட்டி மக்களை மகிழ்ச்சியடையவும் வைக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பகலில் வெயில் தகித்தது. இரவு 8 மணியளவில் பயங்கர இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்த கோடை மழை மக்களையும் விவசாயிகளையும் சற்றே ஆறுதல்படுத்தியிருக்கிறது.
Comments
English summary
Heavy rain lashed in Dindigul District on Wednesday night.