For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் திளைத்த மக்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பருவமழைகள் பொய்த்துப்போனதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Heavy rain in Thiruvarur district

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் மக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதேபோல் நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழைபெய்தது. விலமல், சேந்தமங்கலம், கிடாரம்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
Heavy rain in Thiruvarur district. Public and farmers are happy due to this rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X