For Daily Alerts
Just In
வால்பாறையில் தொடர் கனமழை.. பள்ளிள கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு!
வால்பாறையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடைந்துள்ள தென் மேற்கு பருவமழை தென் மாநிலங்களை ஒரு வழியாக்கிவிட்டது. கேரளாவில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் அம்மாநிலம் வரலாறு காணாத அழிவை சந்தித்துள்ளது.
இதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் இருந்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை கொட்டி வருகிறது. வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அறிவித்துள்ளார்.
Comments
English summary
Coimbatore collector has annouced holiday for schools and colleges today due to heavy rain.
Story first published: Monday, August 20, 2018, 7:34 [IST]