தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் பலத்த மழை கொட்டும்.. வானிலை மையம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தூத்துக்குடி, தேனி திண்டுக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
முக ஸ்டாலினை சந்தித்த விஜய்.. துரைமுருகனுடன் கைகுலுக்கல்.. கல்யாண வீட்டில் கலகல சந்திப்பு
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தற்போது தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 8 சென்டி மீட்டர் மழையும், நாகர்கோவிலில் 6 சென்டி மீட்டர் மழையும் கோவை மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.