ஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்
Recommended Video
சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த 7 நாளைக்கு கனமழை உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
"புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 7 நாள்களுக்கு கனமழை பெய்யும். ஆனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பெய்த மழையைப் போல் இருக்காது. எனவே மிகத்தீவிரமான அதீத கனமழை இருக்குமோ என்று பயப்படத் தேவையில்லை.
அதேநேரம் தமிழகத்தின் நிலவரம் குறித்த பார்த்தோமானால் வெப்பசலனத்தின் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
With formation of new low, the monsoon winds will get activated in Kerala side. There will be some isolated heavy rains in Kerala in the next 7 days not the ones like August 1st week rains. Hence, need not be feared off. https://t.co/cC7Fn8fyHa pic.twitter.com/XVaqPlz9uK
— TamilNadu Weatherman (@praddy06) August 21, 2019
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் விழுப்புரம், கடலூர் பாண்டிச்சேரி பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை மதுரை, சிவகங்ககை, ராமநாதபுரத்திலும், புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. பெங்களூரு முதல் சேலம் வரை மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.