For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் வியாழக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும்.. சொல்கிறது நார்வே வானிலை மையம்!

சென்னையில் வியாக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் கனமழை - வானிலை மையம்- வீடியோ

    சென்னை: வியாக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒர மாதம் கடந்துவிட்டது. ஆனாலும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதுவரை சொல்லும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

    தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அதிரடி காட்டியது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் ஒருவாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் அதன் பிறகு பெரியளவில் மழை இல்லை.

    முதல் முறையாக சந்திக்கிறது

    முதல் முறையாக சந்திக்கிறது

    ஆனால் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் கடந்த இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் முதல் முறையாக தென் தமிழகம் தற்போது நல்ல மழையை சந்தித்து வருகிறது.

    சென்னையில் நாளை முதல்

    சென்னையில் நாளை முதல்

    இந்நிலையில் சென்னையில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன் கிழமையான நாளை காலை முதல் சென்னையில் லேசானது முதல் மிதனமானது வரை மழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விட்டு விட்டு கனமழை

    விட்டு விட்டு கனமழை

    இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்யும் என்றும் அந்த வானிலை மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 நாட்கள் மேகமூட்டம்

    3 நாட்கள் மேகமூட்டம்

    வெள்ளிக்கிழமை சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை முதல் டிசம்பர் 4ஆம் தேதியான திங்கள் கிழமை வரை மூன்று நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்தவாரம் கனமழை..

    அடுத்தவாரம் கனமழை..

    ஆனால் டிசம்பர் 5 செவ்வாய் கிழமையும் டிசம்பர் 6ஆம் தேதியான புதன்கிழமையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. இதுவரை தமிழகத்தில் போதுமான அளவு வடகிழக்குப் பருவமழை பெய்யாத நிலையில் நார்வே நாட்டு வானிலை மைய கணிப்புகள் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Heavy rains will be there in Chennai on thursday said Norway meteorological center said. rains will start from tomorrow and continue till thursday Norway meteorological center said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X