நெல்லையில் பலத்த சூறைக்காற்று.. இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி!
நெல்லையில் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
நெல்லை: பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது.
போதா குறைக்கு கடந்த 4ஆம் தேதி முதல் கத்திரி வெயில் எனும் அக்னிநட்சத்திரமும் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் பரவலாக அதிகரித்துவிட்டது.
தருமபுரியில் மழை
அதேநேரத்தில் பல இடங்களில் வெயிலுக்கு இதமாக கோடை மழையும் பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பிலுகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பலத்த காற்றுடன் மழை
இந்நிலையில் பலத்த சூறைக்காற்றுடன் நெல்லையில் கனமழை கொட்டி வருகிறது. இடி மின்னலுடன் கொட்டும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செங்கோட்டையில் கனமழை
நெல்லை செங்கோட்டை, அச்சன்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பண்பொழிவு, வடகரை, கரிசல்குடியிருப்பு, திருமலைக்கோவில், உள்ளட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
வானிலை மையம் எச்சரிக்கை
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.