For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்...கிண்டி - போரூர் சாலை ஸ்தம்பிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள், ஐ.டி.ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் கடும் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்கள் சென்னை ராமாபுரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கிண்டி - போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து போராடுவதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

Heavy traffic in guindy

கடற்கரையைச் சுற்றியுள்ள சாலைகளான திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, சிவானந்தாசாலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, ஐஸ்ஹவுஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதனால், கடற்கரை சாலையை நோக்கி வரும் பேருந்துகளும், அண்ணா சதுக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகளும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ராமவாரத்தில் நடைபெறும் போராட்டத்தால் கிண்டி-போரூர் சாலை ஸ்தம்பித்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்கள் சென்னை ராமாபுரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிஎல்.எஃப் ஐடி அருகே நடைபெறும் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் கிண்டி ஒலிம்பியா மென்பொருள் நிறுவனம் அருகே போராட்டம் நடைபெறுவதால் ஈக்காட்டுத்தாங்கல், கத்திப்பாரா பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன.

English summary
Heavy traffic in Chennai for students, youths protest for jallikatu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X