சென்னையில் பரவலாக மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்
சென்னையில் பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பிற்பகலுக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று பெய்த மழையால் சென்னையின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தியாகராய நகர் உஸ்மான் சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்ச் பை இன்ச்சாக வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன. வடபழனி, வளசரவாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், அடையாறு, அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களிலும் கடுமையான ட்ராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் மெதுவாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி சென்ற மாணவ, மாணவிகளும் வேலைக்கு சென்றவர்களும் வீடு திரும்புவதில் சிரமம் அடைந்துள்ளனர்.