குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நெல்லை: குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதாக அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாகதமிழகத்தின் தென் மாவட்டங்களின் கனமழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அதுபோல் பழைய குற்றால அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் குற்றால அருவிகளில் நீர் வரத்து குறையத் தொடங்கியது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது.
தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.