For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன்... திக் திக் கதை

    சென்னை: கடத்தப்பட்ட ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வீரப்பன் முன்வைத்திருந்தார்.

    கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த ஜூலை 30-ஆம் தேதி 2000-ஆம் ஆண்டு அவரது பண்ணை வீட்டிலிருந்து வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் கீழ் கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வீரப்பன் கோரிக்கை விடுத்தார்.

    Here are the demands of Veerappan who abducted Kannada actor Rajkumar

    வீரப்பன் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்:

    1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவு கூற வேண்டும்.

    2.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    3. வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்.

    4. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.

    5. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

    6. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வீரப்பன் வலியுறுத்தினார்.

    English summary
    Here the important demands asked by Veerappan to release Kannada Actor Rajkumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X