வெறும் டிவி மட்டும் தான் கொடுத்திருக்காங்களாம் சசிகலாவுக்கு.. ஜெயில் டி.ஜி. சொல்கிறார்!
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து தெரிய வந்துள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து தெரிய வந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலாவுக்கு ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆர்டிஐ
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.பி. ராஜவேலாயுதம் சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டார்.
சிறை அதிகாரி
ராஜவேலாயுதத்தின் கேள்விக்கு சிறைத்துறை டிஜி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் சசிகலாவுக்கு டிவியை தவிர வேறு எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
டிவி ஏன்?
சசிகலா ஒரு கட்சியின் தலைவி என்பதால் அவருக்கு என தனியாக டிவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி டிடிவி தினகரனை சந்தித்து பேச 40 நிமிடம் அனுமதி அளிக்கப்பட்டது என டிஜி கூறியுள்ளார்.
வசதிகள்
சிறையில் வசதிகள் இல்லை என்று சசிகலா கூறினார். தனக்கு சில குறிப்பிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அவை அனைத்தும் செய்து கொடுக்கப்படவில்லை என்று சிறைத்துறை டிஜி அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏசி
சிறையில் சசிகலாவுக்கு தனியாக கழிவறை, வாட்டர் ஹீட்டர், ஏசி, ஹீட்டர், கட்டில், மெத்தை ஆகிய எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லையாம்,