சிறையில் இருந்து சின்னம்மா ரிட்டர்ன்ஸ்... இதுதான் ’கண்டிஷன்ஸ்’
சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலா எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூரு: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா வீட்டில் இருந்து கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று வர மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கொடுத்துள்ளது கர்நாடகா சிறைத்துறை. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா.
5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டாலும் சசிகலாவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வீட்டில் இருந்து நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மட்டும் சென்று வரவேண்டும்.
மருத்துவமனையில் இருந்து வீட்டைத் தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது. தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவமனையில் இருக்கலாம். பொதுக் கூட்டம், பொது நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது; பத்திரிகைகளுக்கு பேட்டி தரவும் கூடாது; அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவும் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.