For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் இருந்து சின்னம்மா ரிட்டர்ன்ஸ்... இதுதான் ’கண்டிஷன்ஸ்’

சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலா எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் சசிகலா

    பெங்களூரு: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா வீட்டில் இருந்து கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று வர மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கொடுத்துள்ளது கர்நாடகா சிறைத்துறை. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா.

    Here is the sasikala's conditions for parole.

    5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டாலும் சசிகலாவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வீட்டில் இருந்து நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மட்டும் சென்று வரவேண்டும்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டைத் தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது. தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவமனையில் இருக்கலாம். பொதுக் கூட்டம், பொது நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது; பத்திரிகைகளுக்கு பேட்டி தரவும் கூடாது; அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவும் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    English summary
    Conditions framed by Bangalore prison department with higher priority of Sasikala not to meet others.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X