அதிமுகவினர் நாடி, நரம்பையெல்லாம் முறுக்கேற்றிய 'இரட்டை இலை' பாடல் !
சென்னை: திமுகவிலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற கட்சியை தொடங்கி இரட்டை இலை சின்னத்தை பெற்றார்.
"உதய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே.." என்றெல்லாம் திரைப்படங்களில் பாடி திமுகவின் உதய சூரியன் சின்னத்திற்கு விளம்பரம் தேடித் தந்தவர் எம்.ஜி.ஆர். இப்போது பதிலடியாக இரட்டை இலையை பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயம்.
அப்போது உருவானதுதான் இந்த பாடல். 1970களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக தமிழகத்தை கலக்கிய ஒரு பாடல் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கணீர் குரலோன் டி.எம்.சவுந்தர்ராஜன் பாட உதயமானது.
'"இரட்டை இலை தந்த வெற்றி இலை" என்று துவங்கும் அந்த பாடலில், திமுக அரசை மறைமுகமாக சாடியும், தங்கள் கட்சி ஏழைகளின் பசியாற்றும் இலையாக இருக்கும் என்றெல்லாம் பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. இரட்டை இலைக்கு பல நல் அர்த்தம் கற்பிக்கும் அந்த பாடலை, இரட்டை இலை சிக்கலில் மாட்டி தீர்ப்பு வெளியாக உள்ள இக்காலகட்டத்தில் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.