ஜெயலலிதா ரத்த மாதிரிகள் உள்ளதா? நாளைக்குள் பதிலளிக்க அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஹைகோர்ட் கெடு
ஜெயலலிதா ரத்த மாதிரிகள் உள்ளதா என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா ரத்த மாதிரிகள் உள்ளதா என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் தான்தான் என அறிவிக்கக்கோரி பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக இளைஞரணி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் ஜெயலலிதா ரத்த மாதிரிகள் குறித்து நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அப்பல்லோ நிர்வாகத்திற்கு சென்னை ஹைகோர்ட் கெடு விதித்துள்ளது.