எச்.ராஜாவிற்கு எதிராக கொந்தளிக்கும் இந்து அறநிலைய ஊழியர்கள்.. அலுவலகத்திற்கு பூட்டு
Recommended Video
ஈரோடு: பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேடசந்தூரில் இந்து அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.
இதற்கு, தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது ஹெச்.ராஜாவின் இந்த அநாகரீக பேச்சை கண்டனம் தெரிவித்து, ஈரோட்டில் இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கங்காதரன் தலைமையில் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று இரண்டாயிரம் ஊழியர்கள், இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.