For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈஷா யோக மையத்தின் மீது அவதூறு பரப்பும் இயக்கங்களை தடை செய்ய அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

ஈஷா யோக மையத்தின் மீதும், பிரதமர் மோடி மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் திராவிடர் மற்றும் கம்யூனிச இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்..

By Vazhmuni
Google Oneindia Tamil News

கோவை : ஈஷா யோக மையத்தின் மீதும், பிரதமர் மோடி மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் திராவிடர் மற்றும் கம்யூனிச இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அர்ஜூன் சம்பத். பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:

Hindu makkal katchi seeks to ban Dravidian movements

ஈஷா யோக மையத்துக்கு தொடர்ந்து எதிராக சில அமைப்பினர் பேசி வருகின்றனர். திராவிடர் கழகங்கள் ,கம்யூனிஸ்ட் இயக்கங்கள் , நக்சல் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.

மஹா சிவராத்திரி ஈஷா யோக மையம் மற்றும் ஆதி யோகி சிவன் சிலையைக் திறக்க வரும் பிரதமர் மோடி குறித்து அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் ஆகியோரைக் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

English summary
The Hindu makkal katchi has filed a complaint in District Collector office to ban Dravidian parties and Communist parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X