For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இந்து முன்னணி' சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

கோவை: இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் சசிகுமார் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு மதமோதலே காரணம்; சர்வதேச சதியெல்லாம் இருக்கிறது எனக் கூறி இந்து முன்னணியின் வெறியாட்டம் போட்டனர்.

Hindu Munnani activist Anand died

இந்த நிலையில் திடீரென இந்து முன்னணியின் மற்றொரு நிர்வாகி ஆனந்த் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது நீதித்துறை நடுவர் கோபிநாத்திடம் வாக்குமூலம் கொடுத்த ஆனந்த், சசிகுமார் கொலை வழக்கில் போலீசார் தம்மை கைது செய்துவிடுவார்களோ என அஞ்சி தீக்குளித்ததாக கூறியிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோவையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

English summary
Hindu Munnani activist Anand who attempted self-immolation died in Coimbatore Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X