தேனி கலவரம்: தலித் மீது தாக்குதல் நடத்துவதா? கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தலித் மீது தாக்குதல் நடத்துவதா? கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Recommended Video
கோவை: தேனி மாவட்டம் பொம்மு நாயக்கன்பட்டி பகுதியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பொம்முநாயக்கன்பட்டி பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தலித் மக்கள் பலர் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து முன்னனி அமைப்பினர் 150 க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தலித் மக்கள் மீதான தாக்குதல் சமபவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தேனி கலவரம்: தலித் மீது தாக்குதல் நடத்துவதா? கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் pic.twitter.com/gZ0Epf0snU
— Oneindia Tamil (@thatsTamil) May 13, 2018
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் தலித்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாகவும், தலித் என்பவர்களே இந்துக்கள்தான் என்றும் குறிப்பிட்டதுடன் திருமாவளவனின் முகத்திரை இச்சம்பவத்தின் மூலம் கிழிக்கப்பட்டு விட்டதாகவும் ஆர்ப்பட்டத்தின்போது குற்றம் சாட்டப்பட்டது"