எச் ராஜாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி... இந்து அறநிலையத்துறையினர் போலீஸில் புகார்
சென்னை: தங்களை இழிவாக பேசிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தங்களை இழிவாக பேசிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நேற்று முன்தினம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.
இதற்கு, தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. எச்.ராஜாவின் இந்த அநாகரீக பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, ஈரோட்டில் இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கங்காதரன் தலைமையில் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தங்களை இழிவாக பேசிய எச் ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.