கர்நாடகத்தில் மிக கனமழை... ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 1.90 லட்சம் கன அடி நீர்வரத்து
பெங்களூர்: கர்நாடகத்தில் மிக அதிகமான மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 1.90 லட்சம் கனஅடி நீர்வரத்து வருகிறது.
கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. மேலும் பல்வேறு நீர் நிலைகளும் நிரம்பியது.
இதையடுத்து அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஒகேனக்கலில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் 1.45 லட்சம் கனஅடியாக இருந்த நீர் வரத்தின் அளவு உயர்ந்தது.
இந்நிலையில் தற்போது ஒகேனக்கல்லில் இருந்து விநாடிக்கு 1.90 லட்சம் கனஅடி நீர் வருகிறது. கர்நாடகத்திலிருந்து தொடர்ந்து பெருமளவில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.