For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடாமல் கொட்டும் பலத்த மழை.. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்கா பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நீலகிரி: பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

rain

நீலகிரி மாவட்டத்தில பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகை, கூடலூர், குன்னூர், பந்தலூர் தாலுக்காவில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையிலும் கனமழை காரணமாக தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்திலம் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.

இதேபோல் திண்டுக்கல்லிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழைக்காரணமாக கொடைக்கானலில் ஊராட்சி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Heavy rain in Nilgris. holiday has been announced in 4 Taluks in Nilgris district. Holiday has announced in Valparai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X