For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் பரவலாக பெய்த மழை..மக்கள் மகிழ்ச்சி- வீடியோ

    சென்னை: கனமழை காரணமாக கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பல பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் பரவலாக மழை நீடிக்கிறது. இதன்காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Holiday announced for Theni, Thiruvarur, Nilgiris schools due to heavy rain

    அதன்படி நீலகிரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்க மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் நிர்மல்ராஜ் எச்சரித்துள்ளார்.

    [தமிழகத்தில் அடுத்த 45 நாட்களுக்கு இடியுடன் கனமழை வெளுக்குமாம்.. இந்திய வானிலை மையம்!]

    தேனியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் வினய் விடுமுறை அறிவித்துள்ளார்.

    இதேபோல் புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு முதல்வர் நாராயணசாமி விடுமுறை அறிவித்துள்ளது. மொகரம் விடுமுறையை ஈடு செய்ய இன்று பள்ளி, கல்லூரிகள் , அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    English summary
    Holiday annonced for Theni, Thiruvarur, Nilgiris schools due to heavy rain. Puducherry Karaikal also has announced leave for schools.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X