For Daily Alerts
Just In
கனமழை: கோவை வால்பாறையில் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழையால் வால்பாறையில் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் கனமழை தொடருவதால் 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவை மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை நீடிப்பதால் 2-வது நாளாக இன்று அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Due to the heavy rain, Coimbatore district Collector has declared holiday for schools in Valparai Taluk.
Story first published: Wednesday, June 28, 2017, 7:49 [IST]