தமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: மிலாது நபி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்துவிதமான மதுக்கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிலாது நபி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம்(சில்லறை விற்பனை) விதிகள் மறறும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
இன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.