5 நாட்கள் விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்கும் தமிழக அரசு
சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழக அரசு.
ஆயுத பூஜை, விஜயதசமி, மொஹரம் பண்டிகையையொட்டி வரிசையாக விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறையாக உள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிவோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். மக்கள் இன்றே சொந்த ஊர்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது.
சிறப்பு பேருந்துகள் விடுகின்றபோதிலும் மக்கள் கூட்டம் அலைமோதத் தான் செய்கிறது.