For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்றிக் காய்ச்சலுக்கு 1,000 பேர் பலி!: கபசுர நீர் குடித்தால் தப்பிக்கலாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை பெண்கள் உள்பட 1000 பேர் பலியாகி இருப்பதாகத் சுகாதாரத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை வரையில் நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1000 பேர் பலியாகி உள்ளனர். 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவதாகவும் அச்சுறுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுபசுர குடிநீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் சித்த மருத்துவர்கள் தலைமைச் செயலகத்தில் சுபசுர குடிநீரை அறிமுகப்படுத்தினர்.

தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?

பக்கத்தில் கூட வராது

பக்கத்தில் கூட வராது

தமிழகத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த, ‘நிலவேம்பு குடிநீர்' அருந்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன்மூலம் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் பீதி ஏற்பட்டுள்ளது. இதற்கு, சித்த மருத்துவத்தில் ‘கபசுர குடிநீர்' என்ற கசாயம் தயாரித்து வழங்கப்படுகிறது.

11வகை மூலிகைகள்

11வகை மூலிகைகள்

11வகை மூலிகைகளைக் கொண்ட சுபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சல் வந்தவர்கள் குடித்தால் 10 நாளில் நோய் குணமாகும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கசாயத்தில், நிலவேம்பு, சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை, கற்பூரவல்லி, சித்தில், சோரைகிழக்கு, கோஸ்டம், அக்ரகாரம் என 11 வகையான மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பிச்சையாகுமார் கூறியுள்ளார்.

விலை ரொம்ப கம்மிதான்

விலை ரொம்ப கம்மிதான்

காய்ச்சல் இல்லாதவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுபசுர குடிநீரைப் பருகலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்த மருத்துவமனைகளில் இந்த குடிநீர் கிடைக்கும்.

10 கிராம் கசாயத்தை 200 மில்லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாக்கி வடிகட்டி காலை மற்றும் மாலை குடித்தால் பன்றிக் காய்ச்சல் நோய் குணமாகும். பன்றிக் காய்ச்சல் வைரஸ் வருவதை தடுக்கவும் இந்த கபசுர குடிநீரை அருந்தலாம். இந்த கசாயம் அனைத்து சித்த மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். தனியார் கடைகளில் 100 கிராம் கபசுர குடிநீர் சூரணம் ரூ.80க்கு விற்கப்படுகிறதாம்.

மூலிகை துளசி

மூலிகை துளசி

மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டு என்கிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி.

வைரஸை கட்டுப்படுத்தும்

வைரஸை கட்டுப்படுத்தும்

துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

நோய் வராமல் தடுக்கும்

நோய் வராமல் தடுக்கும்

நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.

ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.

டாக்டர்கள் அறிவுரை

டாக்டர்கள் அறிவுரை

20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும் என்கிறார் டாக்டர் பூபேஷ் படேல்

இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.

பக்கவிளைவுகள் கிடையாது

பக்கவிளைவுகள் கிடையாது

துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை. துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.

இஞ்சியால் தடுக்க முடியும்…

இஞ்சியால் தடுக்க முடியும்…

சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

வெங்காயம் – பூண்டு

வெங்காயம் – பூண்டு

அதேபோல, வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம். ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாமாம்.

வேம்பு தீர்வுதான்

வேம்பு தீர்வுதான்

வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.

எதிர்ப்பு சக்தி

எதிர்ப்பு சக்தி

வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்திகரித்து இலகுத்தன்மையாக்குகிறது.

அன்னாசிப் பூ

அன்னாசிப் பூ

பன்றிக்காய்ச்சல் மருந்தின் மூலப் பொருள் அன்னாசிப் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டில் மட்டன், சிக்கன் சமைக்கும் போதும், பிரியாணி செய்யும் போதும் பயன்படுத்தப்படும் இந்த அன்னாசிப் பூ பன்றிக்காய்ச்சலை தடுக்கும் அருமருந்தாக உள்ளது. இதில் உள்ள ஷிகிமிக் அமிலத்தில் (skimikic acid) இருந்து தான் அந்த ஆஸ்டமிலாவிர் தயாரிக்கப்படுகிறது.

நில வேம்பு

நில வேம்பு

ஷிகிமிக் அமிலம் நம் நாட்டு மூலிகைகள் கிட்டதட்ட 291 தாவரங்களில் இருப்பதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்வம், வேம்பு முதலான 9 முக்கிய மூலிகைகள் இந்த ஷிகிமிக் அமிலம் காணப்படுகிறது. அருகாமையில் வசிப்பவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்த் தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் குடும்பம் முழுவதும் வில்வம், வேம்பு, அன்னாசிப்பூ மூலிகைகள் அடங்கிய சித்த ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தலாம்.

கசாயம் குடிங்க

கசாயம் குடிங்க

இந்த தாவரங்களை சிறிது காரத்தன்மையுள்ள மூலிகைகளுடன் சேர்த்து கசாயமாக்கிச் சாப்பிட கண்டிப்பாக அந்த கசாயத்தில் இருக்கும் ஷிகிமிக் அமிலமும், அதனோடு கூடுதலாய் ஏராளமாய்க் கிடைக்கும் பிற மூலிகை நுண்சத்துக்களும் உடலினை பன்றிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவிடும்.

இது தவிர உடல் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த மிளகு, மஞ்சள், துளசி, வேப்பம் பூ, சீந்தில், நிலவேம்பு சேர்ந்த சித்த மருந்துகளை எடுப்பதன் மூலம் எச்1என்1-க்கு இடம் கொடுக்காமல் உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

மஞ்சள், பால்

மஞ்சள், பால்

பால் குடிப்பதனால் அலர்ஜி எதுவும் ஏற்படாது என்று நினைப்பவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு குடிக்கலாம்.

கற்றா

கற்றா

கற்றாழை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருள். கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படாது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூச்சுப்பயிற்சி

மூச்சுப்பயிற்சி

தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் தொண்டை, மூக்கு, நுரையீரல் போன்றவற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும். ஹெச்1என்1 வைரஸ் மட்டுமல்லாது தீமை தரும் எந்த வைரசும் நம்மை அண்டாது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் அதிகம் சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். சிட்ரஸ் அமிலம் அடங்கிய பழங்களை உட்கொள்ளலாம்.

சுகாதாரம் அவசியம்

சுகாதாரம் அவசியம்

தினசரி மிதமான தண்ணீரில் நன்றாக கையை கழுவுங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்துங்கள் அப்புறம் பன்றிக்காய்ச்சல் எட்டிக்கூட பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

மாமிச உணவுகள்

மாமிச உணவுகள்

அதைவிட முக்கியம் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

English summary
Here are some easy steps you can take to tackle a flu virus of any kind, including swine flu. It is not necessary to follow all the steps at once. You can pick and choose a combination of remedies that suit you best. However, if you are already suffering from flu, these measures can help only up to an extent. And, if you have been infected by H1N1, visiting a hospital and staying in solitary confinement is a must.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X