For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிணற்றில் தவறி விழுந்த குதிரை- தீயணைப்புத்துறையினர் மீட்பு!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: குமாரபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த குதிரையை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.

குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜேந்திரன். இவர் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். இந்நிலையில் குதிரையானது அருகிலுள்ள இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தது.

மேய்ச்சலில் மும்முரத்தில், குதிரை அப்பகுதியில் உள்ள 100 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் 15 அடி வரை தண்ணீர் இருந்தது.

கிராமமக்கள் எவ்வளவோ முயற்சித்தும் குதிரையை மீட்க முடியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் கிடந்த குதிரையை மீட்டனர்.

பிறகு குதிரைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜோசப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
A horse skit and fell down into a well. Fire service tried and rescued the horse from the well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X