கேவலமான அரசு நிர்வாகத்திற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?
சென்னை: மக்கள் உண்மையில் பாவம்.. அதிலும் தமிழக மக்கள் மிக மிகப் பாவம்.. இந்த சாலையைப் பாருங்கள். இந்த சாலையில் நடந்து செல்லும், வாகனத்தில் செல்லும் மக்கள் படும் பாட்டை எழுதிச் சொல்லத் தேவையில்லை.
இது ஒரு துளிதான். இப்படிப்பட்ட சாலைகளை தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பார்க்கலாம். மோசமான நகர நிர்வாகத்திற்கு, இந்த சாலை மிகச் சரியான உதாரணம்.
இந்த மகா மோசமான சாலை இருப்பது, சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயிலில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மெயின் ரோட்டில்தான்.
இப்படி ஒரு கேவலமான சாலையைப் பார்த்தும் பார்க்காமல் இருக்கும் நகர நிர்வாகம் சோறு சாப்பிடுகிறதா அல்லது வேறு எதையும் சாப்பிடுகிறதா என்று தெரியவில்லை.
மக்களின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது சாலை வசதி. அதைக் கூட சரி செய்ய முடியாமல் ஒரு நிர்வாகம் இருக்கிறது என்றால் அதை விட கேவலமானது எதுவும் இருக்க முடியாது.
இந்த சாலையில் கர்ப்பிணிகளால் பத்திரமாக போய் வர முடியுமா.. முதியவர்கள் பத்திரமாக நடந்து போய் பாதுகாப்பாக திரும்ப முடியும்.. பள்ளிக் குழந்தைகள் எப்படி போய் வர முடியும்..
மழை பெய்தால் சாலை பாதிப்படையும்.. வாஸ்தவம்தான்.. ஆனால் இவ்வளவு பெரிய குழி விழுந்த பின்னரும் கூட அதில் எதையாவது போட்டு குறைந்தபட்சம் ஓரளவுக்காவது சரி செய்யக் கூடவா இந்த நிர்வாகங்களுக்குத் தோன்றாது....?
பாவம் மக்கள்!