இப்பெல்லாம் இப்படித்தான் அண்ணா சாலையில் நடக்குறாங்களாம் மக்கள்.. எப்பூடி!
அண்ணா சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்ய இந்த டெஸ்டிங்கெல்லாம் அவசியமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை போன்ற ஒரு " வீடியோ" வைரலாக பரவி வருகிறது.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் திடீர் திடீரென்று ஏற்படும் பள்ளங்களில் சிக்காமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள கையாள வேண்டியது அவசியமாகும். நாம் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?
மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனை, எல்ஐசி , பாண்டி பஜார், சர்ச் பார்க் கான்வென்ட் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது சாலை பிளந்து கொண்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சர்ச் பார்க் கான்வென்ட் அருகே சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து ரசாயன கலவை கொப்பளித்தது. இதற்கு மெட்ரோ சுரங்க பணிகள்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இப்பெல்லாம் இப்படித்தான் அண்ணா சாலையில் நடக்குறாங்களாம் மக்கள்.. pic.twitter.com/BbHgh55j08
— Oneindia Tamil (@thatsTamil) April 13, 2017
இந்த சூழலில் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் சர்ச் பார்க் கான்வென்ட் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ஒன்று புறப்பட தயாரான போது அங்கு 10 அடி ஆழத்தில் பள்ளம் விழுந்தது. இதனால் பேருந்தும், அதன் பின்னால் வந்த காரும் அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் மீட்பு பணிகள் நிறைவடைந்து சாலைப்பணிகள செப்பனிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா சாலையில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டது. எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் ஒரு கலாய் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. ஸ்பைடர் மேன் உடை அணிந்த ஒருவர் பெரிய ஸ்பேனரால் சாலையை தட்டி தட்டி பார்த்து உறுதியாக இருக்கும் பட்சத்தில் முன்னோக்கி செல்வது போல் உள்ளது. சொல்ல முடியாது பாஸ், இந்த நிலை கண்டிப்பாக வெகுவிரைவில் ஏற்படும் போல. அந்த அளவுக்கு சாலைகள் தரமற்றவையாகவும், நவீனம் என்ற பெயரில் பாதுகாப்புகள் கடைபிடிக்கப்படாமலும் உள்ளது.