For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில்நுட்ப வளர்ச்சி அத்தனையையும் தமிழகம் எப்படி பயன்படுத்துகிறது பாருங்கள்? ராமதாஸ் வேதனை!

ஆப்பில் பணம் செலுத்தினாலும் மதுக்கடைக்கு சென்று தான் மது அருந்த வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டாஸ்மாக்கில் தொழில் வளர்ச்சியை பயன்படுத்தும் தமிழகம்... ராமதாஸ் வேதனை!- வீடியோ

    சென்னை: ஆப்பில் பணம் செலுத்தினாலும் மதுக்கடைக்கு சென்று தான் மது அருந்த வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு முழு முயற்சியாக ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மாநில அரசுகளும் முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் வீடு வீடாக சென்று மது விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஆப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

    ரூ.100கோடிக்கும் அதிகமாக

    ரூ.100கோடிக்கும் அதிகமாக

    தமிழக அரசு 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை நடத்தி வருகிறது.

    இவற்றில், தினமும் சுமார் ரூ. 70 கோடி வரையும், விடுமுறை தினங்களில், ரூ. 100 கோடிக்கும் அதிகமான, மது வகைகள் விற்பனையாகின்றன.

    வீட்டிற்கே சென்று

    வீட்டிற்கே சென்று

    வீடு தேடிச் சென்று உயர்வகை மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசு மீது அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

    அந்த நோக்கமில்லை

    அந்த நோக்கமில்லை

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதில் டாஸ்மாக் நிறுவனத்தால் வீடுகளுக்கு நேரடியாக மதுபானங்களை விற்பனை செய்யும் நோக்கம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.

    அறிமுகம் செய்திட முடிவு

    அறிமுகம் செய்திட முடிவு

    மேலும், மொபைல் இ-வேலட் மூலம் பணம் செலுத்தும் முறையை உயர்வகை மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகளை விற்பனை செய்யும் மால் கடைகளில் அறிமுகம் செய்திட ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் இது பணமில்லா பரிவத்தனைக்கான மற்றொரு முயற்சி என்றும் தெரிவித்தனர்.

    ராமதாஸ் வேதனை

    டாஸ்மாக் அதிகாரிகளின் விளக்கத்துக்கு ராமதாஸ் டிவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார். அதாவது வீடு, வீடாக மது விற்பனை இல்லை. ஆப்பில் பணம் செலுத்தினாலும் மதுக்கடைக்கு சென்று தான் மது அருந்த வேண்டும் - டாஸ்மாக் - அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி அத்தனையையும் தமிழகம் எப்படி பயன்படுத்துகிறது பாருங்கள்? என அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Ramadoss reacting to the Tasmac officials explanation on liquor sale. He has tweeted that There is no sale of alcohol house and house. If you pay through in app als you need to go to the tasmac to drink. how does Tamil Nadu use science, technology and economic growth?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X