For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்யாவின் நினைவெல்லாம் கருணாநிதி!

கருணலாநிதியின் நிழல் நித்யா இப்போது எப்படி இருக்கிறார்?

By Hema Vandhana
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி சமாதியில் கதறி அழும் நித்யா-வீடியோ

    சென்னை: கருணாநிதியின் நிழல் என்று சொல்லப்பட்ட உதவியாளர் நித்யா இப்போது எப்படி இருக்கிறார்?

    கருணாநிதிக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்தபோது கூடவே இருந்து கவனித்து கொண்டவர் நித்யா. அதிலிருந்து நட்புடன் கலந்த சினேக பாசம் கருணாநிதி-நித்யா என இருவரிடமும் அட்டை போல ஒட்டிக் கொண்டது. கருணாநிதியின் பெர்சனல் பிஏ-வாக மட்டும் இல்லாமல், அவரது நிழல், அவரது சிநேகிதன், ஏன் கருணாநிதியின் செல்போன், என எல்லாமுமாகி விட்டார் நித்யா.

     உப்பிட்ட நித்யா

    உப்பிட்ட நித்யா

    நித்யாவின் அபரிமிதமான அன்பின் செயல்பாடுகளால் கருணாநிதிக்கு அவர் மீது பிடிப்பு மேலோங்கியது. நெருக்கம் கூடியது. நித்யாவை பற்றி தனது டைரியிலேயே குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளார். கருணாநிதியை குடும்ப உறுப்பினர்கள் உப்பிட்டு அஞ்சலி செலுத்தியபோது நித்யாவும் உப்பிட்டு அஞ்சலி செலுத்தினார். ரத்த பந்தங்கள் கைப்பிடி மண்ணை அள்ளி போட்டபோதும், நித்யாவும் மண்ணை அள்ளி குழியில் போட்டார்.

     வெறுமையான நித்யா

    வெறுமையான நித்யா

    கருணாநிதியுடன் தன் 24 மணி நேரமும் ஒட்டியும், உறவாடியும், மகிழ்ந்தும், புகழ்ந்தும், நெருங்கியும் வந்த நித்யா இப்போது எப்படி இருக்கிறார்? கருணாநிதியின் மரணத்திலிருந்து இன்னமும் நித்யா மீளவில்லை. யார் வந்து ஆறுதல் கூறினாலும் துக்கம் தொண்டையை அடைத்து கொண்டு நாட்களை கழித்து வருகிறார். கருணாநிதி இல்லாத இந்த உலகம் நித்யாவுக்கு வெறுமையாகவே உள்ளது.

     அசைபோட்டு வருகிறார்

    அசைபோட்டு வருகிறார்

    அதனால்தான் கோபாலபுர வீட்டுக்கு தினமும் 2 முறை சென்று வருகிறார். அந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் கருணாநிதியின் உருவம் இருப்பது போலவே நினைத்து கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார். மாலைப்பொழுதில் கருணாநிதி சமாதிக்கு சென்று உட்கார்ந்து விடுகிறார். கருணாநிதியுடன் எப்போதுமே கூடவே இருந்து கவனித்தபோதெல்லாம் எழுந்த நினைவுகளை கண்களில் நீர் வழிய அசைபோட்டவாறே உட்கார்ந்திருக்கிறார். இப்படியே கோபாலபுரத்துக்கும், சமாதிக்கும் சென்று கொண்டிருக்கிறார்.

     கனக்கும் இதயம்

    கனக்கும் இதயம்

    நினைவு நெஞ்சை இன்னமும் கனக்கத்தான் வைத்துள்ளது. கண்ணீரை நாள் முழுவதும் தோற்றுவித்து கொண்டுதான் உள்ளது. மனம் முழுதும் பழைய சம்பவங்களை அசைப்போட்டே கசப்பான நொடிகளை கழித்து வருகிறார். வரும் எதிர்காலத்தின் கோடி நிமிடங்களும் வலியுடனேதான் நித்யாவுக்கு பயணிக்கும். மீளா துயரிலிருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் மூழ்கி கொண்டே இருக்கிறார் நித்யா!!

    English summary
    How is Karunanidhi's PA Nithya Now?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X